Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மல்லசமுத்திரம்: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.
மல்லசமுத்திரம் அருகே உள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று ஆடி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவில் உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு தோற்றத்தில் முருகன் காட்சியளித்தார். சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.